அமைச்சர்கள் குழு கார்கள் வழிமறிப்பு - மழைநீர் வடிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் மழையினால் தேங்கிய நீரை இதுவரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
x
தஞ்சை மாவட்டம் மதுக்கூரில்  மழையினால் தேங்கிய நீரை இதுவரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதிக்கு பார்வையிட வந்த கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி தலைமையிலான 7 பேர் கொண்ட அமைச்சர் குழுவினர் சென்ற வாகனங்களை பொதுமக்கள் திடீரென வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  பின்னர் காரிலிருந்து கீழே இறங்கிய அமைச்சர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்