கொசஸ்தலை ஆற்றின் நடுவே சிக்கிய பொதுமக்கள் - படகு மூலம் மக்களை மீட்ட தீயணைப்பு துறை

சென்னை அடுத்த செங்குன்றம் அருகே கொசஸ்தலை ஆற்றின் நடுவே சிக்கி தவித்த பொதுமக்களை தீயணைப்பு துறை வீரர்கள் மீட்டனர்.
x
ஆற்றின் நடுவே உள்ள மிக சிறிய ஆத்தூர் கிராமத்தை சேர்ந்த 16 குடும்பத்தினர் வெள்ளத்தில் சிக்கி தவிப்பதாக தீயணைப்பு துறைக்கு தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு குழுவினர், ரப்பர் படகு மூலம் அவர்களை உயிருடன் மீட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்