விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பு - காற்று மாசு 4 மடங்கு அதிகரிப்பு
கோவையில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததால் காற்று மாசு 4 மடங்கு அதிகரித்ததாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீபாவளியன்று காற்று மாசு தர குறியீடு, கோவை கவுண்டம்பாளையத்தில் 209 ஆகவும், ஆட்சியர் அலுவலகம் பகுதியில் 203 ஆகவும் அதிகரித்துள்ளது. இதேபோல கோவையில் ஒலி மாசு 73 டெசிபல் ஆக அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story