அரசு கால்நடை மருத்துவருக்கு நெஞ்சுவலி: உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் இறந்ததாக உறவினர்கள் தர்ணா

நெல்லையில் நெஞ்சுவலியால் அனுமதிக்கப்பட்ட அரசு கால்நடை மருத்துவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் இறந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அரசு கால்நடை மருத்துவருக்கு நெஞ்சுவலி: உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் இறந்ததாக உறவினர்கள் தர்ணா
x
நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த கால்நடை மருத்துவர் ராஜீவ். இவர் மூலக்கரைப்பட்டி அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார்.  திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜீவ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவ பயிற்சி மாணவர்கள் சிகிச்சை அளித்தனர்.  இதய சிகிச்சைக்கான மருத்துவர் தாமதமாக வந்து சிகிச்சை ஆரம்பித்ததே உயிரிழப்புக்கு காரணம் எனக்கூறி மருத்துவர் ராஜீவ் உறவினர், ஆட்சியர் இல்லம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். அலட்சியமாக செயல்பட்ட கல்லூரி முதல்வர், இதய சிகிச்சை மருத்துவர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர். குடும்பத்தை சேர்ந்த 5 மருத்துவர்கள், பாளையங்கோட்டை அரசு மருத்துவனையில் பணிபுரிந்தும், சிகிச்சை பலனின்றி மருத்துவர் ராஜீவ் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்