புதிய மாவட்டங்களில் சமூக நல அலுவலகங்கள் - நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

தமிழகத்தில் புதிதாக உதயமான 6 மாவட்டங்களில் சமூக நல அலுவலகங்கள் தோற்றுவிக்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
புதிய மாவட்டங்களில் சமூக நல அலுவலகங்கள் - நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு
x
தென்காசி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய 6 புதிய மாவட்டங்களில், சமூக நல அலுவலகங்கள் புதிதாக தோற்றுவிக்க தமிழக அரசு  நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதற்காக நான்கு கோடியே 99 ஒன்பது லட்சத்து நாற்பதாயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் சமூகத்தின் நலிவுற்ற பிரிவினருக்காக செயல்படுத்தப்பட்டு வரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் நலத் திட்டங்கள் பயனாளிகளுக்கு சென்றடைய வழிவகை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்