பட்டதாரி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: பாலியல் தொழிலாளி என கூறி 13 நாட்கள் காவல்

வேலை தேடி சென்னைக்கு வந்த பொறியியல் பட்டதாரி பெண் ஒருவரின் வாழ்க்கை சிலரால் திசை மாறி சென்றிருக்கும் நிலையில் தனக்கு நேர்ந்த துயரத்திற்கு உரிய நியாயம் கேட்டு நிற்கிறார் அந்த பெண்... இதன் பின்னணியில் நடந்தது என்ன? இப்போது பார்க்கலாம்...
பட்டதாரி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: பாலியல் தொழிலாளி என கூறி 13 நாட்கள் காவல்
x
மதுரையை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான பெண் ஒருவர், வேலை தேடி சென்னைக்கு வந்துள்ளார். கொரோனா கால கட்டம் என்பதால் அவருக்கு வேலை கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்படவே, இணையங்களில் வேலை குறித்து தேடி வந்துள்ளார்..
அப்போது மசையா ஸ்பா என்கிற நிறுவனத்தில் வேலை இருப்பதாக தெரியவந்துள்ளது. அதன்படி அந்த நிறுவனத்தில் விண்ணப்பித்த அவருக்கு வேலையும் கிடைக்கவே, வீட்டில் இருந்த படி அந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். 

ஒரு மாதம் வேலை​ செய்த பிறகு சென்னை தியாகராய நகரில் உள்ள நிறுவனத்துக்கு சம்பளம் வாங்க சென்றுள்ளார் அந்த பெண். அப்போது திடீரென போலீசார் அங்கு வந்துள்ளனர். அந்த ஸ்பாவில் பாலியல் தொழில் நடப்பதாகவும், அதற்காக ரெய்டு வந்ததாகவும் கூறப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட பெண் உட்பட 4 பெண்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
தனக்கும் இதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என அந்த பெண் கூறிய போதிலும் யாரும் அதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இதனிடையே அந்த பெண்ணுக்கு கன்னித்தன்மை சோதனை உள்பட பல சோதனைகளை போலீசார் செய்தததாக கூறப்படுகிறது… 


Next Story

மேலும் செய்திகள்