நிரம்பிய குமரி அணைகள் - 25,738 கன அடி நீர் வெளியேற்றம்

கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் இருந்து 25 ஆயிரத்து 738 கன அடி உபரி நீர் திறக்கப்படுவதால் தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிரம்பிய குமரி அணைகள் - 25,738 கன அடி நீர் வெளியேற்றம்
x
குமரியில் பெய்யும் தொடர் கனமழையால், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் 1 மற்றும் சிற்றார் 2 அணைகள் முழுக்கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளன. இதனால் உபரி நீர் வெளியேற்றம் தொடர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 15 ஆயிரத்து 18 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையில் இருந்து 8 ஆயிரத்து 854 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அதேபோல், சிற்றார் 1ல் இருந்து ஆயிரத்து 1196 கன அடி தண்ணீரும், சிற்றார் 2ல் இருந்து 2 ஆயிரத்து 670 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது. மொத்தம் 4 அணைகளில் இருந்தும் 25 ஆயிரத்து 738 கன அடி உபரி நீர் திறக்கப்படும் காரணத்தால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளம் கடந்து செல்லும் சாலைகளில் போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்