பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற அதிகாரிகள் - வாக்குவாத‌த்தில் ஈடுபட்ட 16 பேர் கைது

விருதுநகரில் 15 ஆண்டுகளாக இருந்த பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற வருவாய்த்துறையினரிடம் வாக்குவாதம் செய்த 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற அதிகாரிகள் - வாக்குவாத‌த்தில் ஈடுபட்ட 16 பேர் கைது
x
காரியாப்பட்டி பிச்சம்பட்டி கிராமத்தில் உள்ள கோவில் திருவிழா ஊர்வலம் செல்லும் பாதையை பயன்படுத்த கூடாது என ராஜாங்கம் என்பவர், 15 ஆண்டுகளாகவே தகராறு செய்து வந்துள்ளார். இதுகுறித்து நீதிமன்றத்தை நாடியபோது பொதுமக்கள் அந்த பாதையை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ராஜாங்கம் தரப்பினர் அமைத்துள்ள ஆக்கிரமிப்பை நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் துணையுடன் அதிகாரிகள் அகற்ற முயன்ற போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 2 பேர் மயங்கி விழுந்த‌தால் அங்கு பதற்றம் அதிகரித்த‌து. இதையடுத்து போலீசார் 16 பேரை கைது செய்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். 


Next Story

மேலும் செய்திகள்