புதுமண தம்பதி தூக்கிட்டு தற்கொலை - திருமணமான 7 மாத‌த்தில் விபரீத முடிவு

கமுதி அருகே காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுமண தம்பதி தூக்கிட்டு தற்கொலை - திருமணமான 7 மாத‌த்தில் விபரீத முடிவு
x
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கிளாமரம் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் மற்றும் தனலட்சுமி ஆகியோர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். முன்னதாக, திருமணத்திற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்த‌தாகவும், பின்னர் சம்மதம் தெரிவித்து திருமணம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தனலட்சுமி கர்ப்பமடைந்துள்ளார். ஆனால் அவர்களுக்கு பெற்றோர் உதவி எதுவும் செய்யாததால் இருவரும் மனமுடைந்த‌தாக தெரிகிறது. இந்நிலையில் இன்று அதிகாலையில் வீட்டில் கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்