சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை - அமைச்சர் செந்தில்பாலாஜி

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒரு லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் இருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
x
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒரு லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் இருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் பகுதியில் தூய்மை கரூர் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளை நடைப்பயிற்சி மேற்கொண்டபடி அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். அப்பொழுது பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் மூவாயிரத்து 500 தெரு விளக்குகள் புதிதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும், அனல் மின் நிலையங்களில் 3500 மெகாவாட் மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்