கடைக்குள் புகுந்து செல்போன் திருட்டு: வெளியான சிசிடிவி காட்சிகள் - விசாரணை
திருவாரூர் அருகே கடைக்குள் புகுந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருத்துறைப்பூண்டி அருகே சங்கேந்தி கிராமத்தில் ஜெராக்ஸ் கடை வைத்திருப்பவர் கார்த்தி. அவரின் 5 வயது மகள் கடையில் இருந்த போது அங்கு வந்த மர்ம நபர் சிறுமியின் கவனத்தை திசை திருப்பி அங்கிருந்த செல்போனை திருடிச் சென்றார். பின்னர் அவர் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்லும் காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகி இருந்த நிலையில் போலீசார் அதை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story