விழுப்புரம் பொன்னங்குப்பம் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு - வெறிச்சோடி கிடக்கும் வாக்குச்சாவடி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பொன்னங்குப்பத்தில், தேர்தல் புறக்கணிப்பு நடப்பதால், வாக்குப் பதிவு மையங்கள் வெறிச்சோடியது.
x
பொன்னங்குப்பம் ஊராட்சியுடன் துத்திப்பட்டு கிராமம் இணைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதில், துத்திப்பட்டில் இரண்டாயிரத்து 400 வாக்குகள் உள்ளதாகவும், ஆயிரத்து 400 வாக்குகள் குறைவாக உள்ள பொன்னங்குப்பம் பகுதி வேட்பாளர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினர். பதவிகளை ஏல முறையில் முடிவு செய்த நிலையில், பெயரளவில் நடக்கும் தேர்தல் தேவையில்லை என புறக்கணித்துள்ளதால் வாக்குப் பதிவு மையம் வெறிச்சோடி உள்ளது. இதனிடையே, துத்திப்பட்டு கிராமத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்