காந்தியின் அரையாடை புரட்சியின் நூற்றாண்டு விழா - ராம்ராஜ் நிறுவனம் சார்பில் கொண்டாட்டம்

மகாத்மா காந்தியின் அரையாடை புரட்சி நூற்றாண்டு விழா திருப்பூரில் ராம்ராஜ் நிறுவனம் சார்பில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
x
நூற்றாண்டு விழாவை ஒட்டி100 மரக்கன்றுகள் நடப்பட்டு, அவற்றை பாதுகாக்க ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டது. அதே போல் நலிவடைந்த 3 நெசவாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை ராம்ராஜ் காட்டன் உரிமையாளர் நாகராஜன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மகாத்மாவை கொண்டாடுவோம் என்ற புத்தகத்தை பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் வெளியிட்டார்.  மேலும்100 சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினர்கள் மற்றும் 100 நெசவாளர்கள் விழாவில் கௌரவிக்கப்பட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்