ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் பெண் ஊழியர்களை ஆபாசமாக போட்டோ எடுத்து டுவிட்டரில் பதிவு - அலுவலர் கைது

ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் பெண் ஊழியர்களை ஆபாசமாக போட்டோ எடுத்து, டுவிட்டரில் பதிவிட்ட அலுவலர், கைது செய்யப்பட்டார்.
ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் பெண் ஊழியர்களை ஆபாசமாக போட்டோ  எடுத்து டுவிட்டரில் பதிவு - அலுவலர் கைது
x
சிவகிரி கொல்லாங்கோவில் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில், சீனியர் வருவாய் ஆய்வாளராக  பணி புரிந்து வருகிறார். இவர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சக பெண் ஊழியர்களை, அவர்களுக்கு தெரியாமல் செல்போனில் படம் பிடித்து, டுவிட்டரில் பதிவேற்றியுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் ஊழியரின் பெற்றோர், சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், சதீஷ்குமார் பெண் ஊழியர்களை செல்போனில் படம் பிடித்து டுவிட்டரில் பதிவேற்றம் செய்தது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி,ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்