ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த முதியவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த முதியவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த முதியவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்
x
ஆம்பூர் அடுத்த கதவாளம் பகுதியை சேர்ந்த நந்தன் என்பவருக்கும், முன்னாள் ஊர் நாட்டாமையான சிவகுமார் குடும்பத்துக்கும் முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. மோதலில், சிவக்குமாரின் உறவினரான வி.ஏ.ஓ. பாக்கியலட்சுமி காயமடைந்து மருத்துவமனையில் உள்ளார். இதில், நந்தன் மிரட்டப்பட்ட நிலையில், ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுக்கச் சென்ற அவர், அங்கு, மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளித்து இறந்தார். அவரது உடலை, கதவாளம் கிராமத்துக்கு போலீசார் கொண்டு சென்ற நிலையில், உடலை வாங்க மறுத்த உறவினர்கள், சிவகுமார், அவரது உறவினர்கள் பாக்யலட்சுமி, சாமிநாதன், வனிதா, பாஞ்சாலி ஆகியோரை கைது வலியுறுத்தி  மறியல் செய்தனர். போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இதனால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்