குழந்தைகள் விற்பனை விவகாரம் - ஜாமின் மறுப்பு
மதுரையில் சட்டவிரோதமாக குழந்தை விற்பனை செய்த வழக்கில் காப்பகத்தின் நிறுவனர் சிவகுமார் உதவியாளர் மதார்ஷா ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகள் விற்பனை செய்த விவகாரத்தில் சிவகுமாரின் உதவியாளராக பணிபுரிந்த மதார்ஷா என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமின் கோரி மனு செய்தார். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நீதிபதி தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி குழந்தைகளை சட்டவிரோதமாக பிறருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றும், ஆவணங்களும் முறைகேடாக தயார் செய்யப்பட்டுள்ளது என கூறினார். ஆவணங்கள் தயார் செய்வதில் இவருக்கு முக்கிய பங்கு உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளதாக கூறிய நீதிபதி ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்தார். இதனை தொடர்ந்து மனுதாரரின் வழக்கறிஞர் மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக கூறியதால் அதற்கு அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.
Next Story