நள்ளிரவில் ஏடிஎம் கொள்ளை முயற்சி: பிடிபட்ட 3 பேரிடம் போலீசார் விசாரணை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே நள்ளிரவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி அரங்கேறியுள்ளது.
x
எளாவூர் பஜாரில் இயங்கி வரும் தனியார் வங்கி ஏ.டி.எம்.மில் நேற்றிரவு மர்மநபர்கள்  வெல்டிங் செய்து உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அப்போது போலீஸ் நடமாட்டத்தை அறிந்து அச்சத்தில் தப்பியோடியதாக கூறப்படுகிறது. இருப்பினும் சந்தேகிக்கும் வகையில் சென்ற ஆந்திர மாநில பதிவெண் கொண்ட காரை துரத்தி சென்று பிடித்தனர். ஓட்டுநர் தப்பியோடிய நிலையில், 3 பேர் போலீசாரிடம் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து சந்தேகத்திற்கு இடமான பொருட்களை பறிமுதல் செய்த போலீசார்,  ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர் 


Next Story

மேலும் செய்திகள்