கோயில் திருவிழா ஒத்திவைப்பு - சாமியாடிய பெண்களால் பரபரப்பு
சேலம் மாவட்டம் வி.குமாரபாளையம் கிராமத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கோயில் திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் வி.குமாரபாளையம் கிராமத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கோயில் திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நூற்றுக்கணக்கான கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுமட்டுமின்றி, மேளதாளம் இல்லாமல் பெண்கள் சாமியாடியதோடு அருள்வாக்கு சொல்லி கூச்சலிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சாமியாடிய ஒரு பெண்ணுக்கு கீழே விழுந்து புரண்டதில் கை எலும்பு முறிந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Next Story