வாய்த்தகராறால் சாலையில் அடித்து கொண்ட அண்ணன், தம்பி

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கணபதிபாளையத்தில் வாய்த் தகராறில் அண்ணன், தம்பி இருவர் சாலையில் அடித்துக்கொண்டனர்.
வாய்த்தகராறால் சாலையில் அடித்து கொண்ட அண்ணன், தம்பி
x
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கணபதிபாளையத்தில் வாய்த் தகராறில் அண்ணன், தம்பி இருவர் சாலையில் அடித்துக்கொண்டனர். மது அருந்திய அண்ணன் தம்பி வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்த போது வாய்த்தகராறில் ஈடுபட்டனர். இருவருக்கும் இடையே வாய்த்தகராறு அதிமாகவே இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து உடனடியாக கோபி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த கோபி போலீசார் உடனடியாக அங்கு சென்று இருவரையும் விலக்கினர். மேலும் காயமடைந்த நிலையில் சாலையில் கிடந்தவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்