திருமண ஆசை காட்டி பண மோசடி செய்த நைஜீரியர்கள் - 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி

திருமண ஆசை காட்டி சென்னை பெண்ணிடம் பண மோசடி செய்ததாக கைதான நைஜீரியர்கள் 2 பேரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
திருமண ஆசை காட்டி பண மோசடி செய்த நைஜீரியர்கள் - 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி
x
திருமண ஆசை காட்டி சென்னை பெண்ணிடம் பண மோசடி செய்ததாக கைதான நைஜீரியர்கள் 2 பேரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் திருமண இணையதளத்தில் விண்ணப்பித்திருந்த நிலையில் அவரை தொடர்பு கொண்ட ஒருவர் திருமண ஆசை காட்டி 3 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் வரை பறித்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஆபரேஷன் டி என அமைத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், நைஜீரியர்கள் 2 பேரை கடந்த 2ஆம் தேதி டெல்லியில் வைத்து கைது செய்தனர். கைதான 2 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், 3 நாள் விசாரணை செய்ய அனுமதி அளித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்