ராஜ்யசபா எம்.பி.யின் பேரன் படுகொலை - வீடு புகுந்து கொலை செய்த கொடூரம்

நாமக்கல் அருகே ராஜ்யசபா முன்னாள் திமுக எம்.பி.யின் பேரன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...
ராஜ்யசபா எம்.பி.யின் பேரன் படுகொலை - வீடு புகுந்து கொலை செய்த கொடூரம்
x
நாமக்கல் அருகே ராஜ்யசபா முன்னாள் திமுக எம்.பி.யின் பேரன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த பேளுக்குறிச்சியில் உள்ள மாந்தோப்பு பகுதியில் ராஜேந்திரன் என்ற விவசாயி வசித்து வந்தார். இவர் திமுக முன்னாள் ராஜ்யசபா எம்.பி.யான சோமசுந்தரத்தின் பேரன். ராஜேந்திரன் தன் மனைவியுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதனிடையே ஞாயிற்றுக்கிழமை இரவு இவரது வீட்டிற்குள் புகுந்த ஒரு கும்பல் ராஜேந்திரனை அரிவாளால் வெட்டி சாய்த்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கூலிப்படையை சேர்ந்த 5 பேரை கைது  செய்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ராஜேந்திரன் தன் விவசாய நிலத்தை விற்றதாக கூறப்படும் நிலையில் அதன் காரணமாக கொலை நடந்ததா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது

Next Story

மேலும் செய்திகள்