தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த 2 பேர் பலி : விஷ வாயு தாக்கியதில் பலியான சோகம்

சென்னையில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளர்கள் பலியான சம்பவத்தில் வீட்டின் உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரரை போலீசார் கைது செய்தனர்.
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த 2 பேர் பலி : விஷ வாயு தாக்கியதில் பலியான சோகம்
x
சென்னை சூளைமேடு நமச்சிவாய புரம் பகுதியை சேர்ந்தவர் பாலு. இவர் புதிதாக அதே பகுதியில் வீடு ஒன்றை கட்டி வருகிறார். இதனிடையே பல மாதங்களாக மூடிக்கிடந்த தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய ஆள் தேவை என கொரட்டூரை சேர்ந்த ராஜ்பாபு என்பவரை தொடர்பு கொண்டுள்ளார். இதையடுத்து திருவேற்காட்டை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மற்றும் திப்பு சுல்தான் என 2 பேர் தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யும் வேலைக்கு வந்துள்ளனர். அப்போது தொட்டியை திறந்து உள்ளே இறங்கிய போது விஷ வாயு தாக்கியதில் 2 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் பாலு மற்றும் காண்டிராக்டர் ராஜ்பாபு ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்