நீட் தேர்வு பயம்-மாணவர் தற்கொலை.. உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி.. ரூ.10 லட்சம் நிதி உதவி

நீட் தேர்வு பயம்-மாணவர் தற்கொலை.. உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி.. ரூ.10 லட்சம் நிதி உதவி
x
நீட் தேர்வு பயம்-மாணவர் தற்கொலை.. உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி.. ரூ.10 லட்சம் நிதி உதவி 

நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய உதயநிதி ஸ்டாலின்,10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.சேலம் மாவட்டம் அருகே உள்ள கூளையூர் கிராமத்தில் நீட்தேர்வு பயம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவர் தனுஷின் உடலுக்கு திமுக மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில்  அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது,செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வால் மாணவர்கள், பெற்றோர் பாதிக்கப்படுவதாக கூறினார். இந்த பிரச்சனையை அரசியல் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டவர். நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாளை சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்