ரூ.200 கோடியை ஏமாற்றியதாக தனியார் நிதி நிறுவனம் மீது குற்றச்சாட்டு - பணத்தை திருப்பி தரக்கோரி சாலை மறியல்

திருத்தணியில் 200 கோடி ரூபாய் அளவுக்கு பணத்தை ஏமாற்றிய தனியார் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ரூ.200 கோடியை ஏமாற்றியதாக தனியார் நிதி நிறுவனம் மீது குற்றச்சாட்டு - பணத்தை திருப்பி தரக்கோரி சாலை மறியல்
x
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை ஈர்க்கும் வகையில், பல்வேறு சலுகைகளை குறைந்த விலையில் வழங்கி வந்தது தனியார் நிறுவனம். ஒரு லட்சம் ரூபாய் கட்டினால் மாதம் 10 ஆயிரம் ரூபாய் தருவதாக அந்த நிறுவனம் கூறவே, ஏராளமான பொதுமக்கள் அதனை நம்பி பணத்தை கட்டியுள்ளனர். ஆனால் கடந்த சில மாதங்களாக அந்த நிறுவனம் பணத்தை வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் தங்கள் பணத்தை மீட்டுத் தரக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுவரை 200 கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு முன்வைத்த அவர்கள் தங்கள் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என வலியுறுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்