நடிகர் விவேக் மரணம் - "8 வாரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும்" : தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

நடிகர் விவேக் மரணம் குறித்து 8 வார காலத்திற்குள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விவேக் மரணம் - 8 வாரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் : தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
x
நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தது  தொடர்பாக விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன், தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு அனுப்பியிருந்தார். நடிகர் விவேக்கிற்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட விவகாரத்தில் உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை என்றும், எனவே இது குறித்து தேசிய  மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுகொண்டார். இந்த புகார் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் மத்திய சுகாதார துறை அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் சமூக ஆர்வலரின் புகார் மனு மீது 8 வார காலத்திற்குள் விசாரணை நடத்தி அது குறித்து அறிக்கையை புகார்தாரருக்கு தெரிவிக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் கேட்டுகொண்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்