விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்பு; முதலமைச்சர் உத்தரவு - அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழகத்தில் விவசாயிகளுக்கு நடப்பு நிதியாண்டில் 1 லட்சம் மின் இணைப்புகளை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் விவசாயிகளுக்கு நடப்பு நிதியாண்டில் 1 லட்சம் மின் இணைப்புகளை வழங்க வேண்டும் என்று  முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.  கரூரை அடுத்த புலியூரில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு, அவர் பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடசென்னை, தூத்துக்குடியை தொடர்ந்து மேட்டூர் அனல்மின் நிலையத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார். 

தமிழகத்தில் 4 லட்சத்து 52 ஆயிரத்து 777 விவசாயிகள் இலவச மின்சார இணைப்பு கேட்டு விண்ணப்பித்து கடந்த 18 ஆண்டுகளாக காத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.  நடப்பு நிதி ஆண்டில் விவசாயிகளுக்கு 1 லட்சம் மின்இணைப்புகள் வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நாளை நெல்லையில் நடைபெற உள்ளதாகவும் அமைச்சர் செந்தில் 
பாலாஜி கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்