"பொருநை நாகரிகம்-பிரதமருக்கு அனுப்புங்கள்" - அண்ணாமலைக்கு, எம்.பி. சு.வெங்கடேசன் பதிலடி

அண்ணாமலை விநாயகர் அருள்பெற, பொருநை நதி நாகரிகம் குறித்த முதல்வரின் அறிக்கையை, பிரதமருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கோரியுள்ளார்.
x
விநாயகர் சிலையை பொது இடத்தில் வைத்து வழிபட தமிழக அரசு, தடை செய்துள்ள நிலையில், அதற்கு அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முதல்வருக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டை அனுப்புமாறும் கட்சியினருக்கு அறிவுறுத்தி உள்ளார். இதற்கு டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ள எம்.பி. சு.வெங்கடேசன், பொருநை நதி நாகரிகம் குறித்த முதல்வரின் அறிக்கையை பிரதமருக்கு அனுப்பினால், சங்கத் தமிழ் மூன்றும் தந்து விநாயகப் பெருமான் அருள்பாளிக்க வாய்ப்புள்ளது என கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்