கொடைக்கானல் நகராட்சி வருவாயை அதிகரிக்க திட்டம் - சட்ட மசோதா அறிமுகம் செய்த அமைச்சர் கே.என்.நேரு

தமிழக சட்டசபையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சட்ட மசோதா ஒன்றை அறிமுகம் செய்தார்.
கொடைக்கானல் நகராட்சி வருவாயை அதிகரிக்க திட்டம் - சட்ட மசோதா அறிமுகம் செய்த அமைச்சர் கே.என்.நேரு
x
தமிழக சட்டசபையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சட்ட மசோதா ஒன்றை அறிமுகம் செய்தார். இதன்படி, கொடைக்கானல் நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள கொடைக்கானல் ஏரியில் படகு ஓட்டும் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் ஏரியை சுற்றியுள்ள இயற்கை எழிலை ரசிக்கவும், அதன் மூலம் நகராட்சியின் வருவாயை மேலும் அதிகரிக்கச் செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் படகு ஓட்டிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இந்த நோக்கத்திற்காக தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு செய்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்