மீனாட்சி அம்மன் கோவிலில் ஆணையர் ஆய்வு: புதுப்பிப்பு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரம் பகுதியில் 2018 ஆம் ஆண்டு கிழக்கு கோபுரம் பகுதியில் ஏற்பட்டதீ விபத்தில் அங்கு உள்ள வீர வசந்த ராயர் மண்டபம் சேதமடைந்தது.
இதையடுத்து தமிழக அரசு சார்பில் வீர வசந்த ராயர் மண்டபத்தை புதுப்பிக்க 18 கோடியே 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் கண்ணன் மீனாட்சி அம்மன் கோவில் வசந்த மண்டப புதுப்பிப்பு பணிகள், பிரசாதம் தயாரிக்கும் கூடம் மற்றும் காயம்பட்ட யானை ஆகியவற்றை நேரில் பார்வையிட்டார். அதன் பிறகு அவர் கோவில் அதிகாரிகளிடம் வீர வசந்த ராயர் மண்டபத்தை புதுப்பிக்கும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டு உள்ளார்.
Next Story