"மயானத்திற்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு" - உரிய நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவு

மதுரை மேலவளவு கிராமத்தில், மயானத்திற்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
x
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த மேலவளவு பகுதியில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அங்குள்ள மயானத்துக்கு செல்லும் பாதையை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து உள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. ஆக்கிரமிப்பு தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என மனுதார் தனது மனுவில் குற்றம்சாட்டியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள் பாரதிதாசன், நிஷாபானு ஆகியோர், மனுதாரரின் புகார் குறித்து அதிகாரிகள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்