19 மாணவ, மாணவிக்கு கொரோனா உறுதி - தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை அளிப்பு
திருவாரூர் மாவட்டத்தில் 19 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் 19 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. நாமக்கல் , தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் சில பள்ளி , கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது . இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 19 மாணவ மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . அடியக்கமங்கலம், முன்ன வாள்கோட்டை , அரித்துவாரமங்கலம் மற்றும் தலைக்காடு அரசு மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 4 மாணவ மாணவிகள் உள்பட 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவ, மாணவிகள் , ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
Next Story