"ஆதிதிராவிடர் குடியிருப்பில் சமுதாய கூடம்; கட்டுவது குறித்து பரிசீலனை செய்யப்படும்" - அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உறுதி

அரக்கோணம் தொகுதி வடமாம்பாக்கம் ஊராட்சி மங்கம்மாபேட்டை ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் சமுதாயக் கூடம் கட்டுவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர் குடியிருப்பில் சமுதாய கூடம்; கட்டுவது குறித்து பரிசீலனை செய்யப்படும் - அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உறுதி
x
அரக்கோணம் தொகுதி வடமாம்பாக்கம் ஊராட்சி மங்கம்மாபேட்டை ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் சமுதாயக் கூடம் கட்டுவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ஆதிதிராவிடர் மக்களின் எண்ணிக்கை, சமுதாய கூடம் கட்ட கிடைக்கும் இடம் மற்றும் தேவையான நிதி ஒதுக்கீடு ஆகியவை கணக்கில் கொண்டு சமுதாய கூடங்கள் ஆண்டுதோறும் கட்டப்பட்டு வருவதாக தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர் ரவி கோரிக்கை தொடர்பாக முன்னுரிமையின் அடிப்படையில் பரிசீலனை செய்யப்படும் என்றும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ்  கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்