பொங்கல் வேட்டி-சேலை திட்டம் - முதல் தவணைத் தொகை வழங்க அனுமதி

2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்கு, முதல் தவணைத் தொகையாக சுமார் 157 கோடி ரூபாய் வழங்க நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
பொங்கல் வேட்டி-சேலை திட்டம் - முதல் தவணைத் தொகை வழங்க அனுமதி
x
கைத்தறி மற்றும் துணிநூல் துறை கொள்கை விளக்கக் குறிப்பில், 2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினை செயல்படுத்த வரவு செலவு திட்ட மதிப்பீட்டில், 490 புள்ளி 27 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும், இந்த திட்டத்தினை செயல்படுத்த முதல் தவணைத் தொகையாக157 புள்ளி 38 கோடி ரூபாய் வழங்க அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2022 பொங்கல் வேட்டி, சேலை திட்டத்துக்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கைத்தறித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்