நிபா வைரஸ்- தமிழகத்தின் வழிகாட்டு நெறிமுறைகள்
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மெற்கொள்ளும் நோக்கில் தமிழக மருத்துவத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது.
"காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுவாச பிரச்சினை, மனநலம் பாதிப்பு முக்கிய அறிகுறி"
நிபா வைரஸ் பாதித்த நபருடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு 21 நாட்கள் தனிமை அவசியம்
கேரளா பகுதியை ஒட்டிய 6 மாவட்ட எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரம்
கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்ட எல்லைகள் கண்காணிப்பு
ரத்தம், தொண்டை சளி, சிறுநீர் மாதிரிகளை பரிசோதனைக்கு எடுக்க வேண்டும்
மாதிரிகளை 48 மணி நேரத்திற்குள் ஆய்வகத்திற்கு அனுப்பவேண்டும்
உரிய பாதுகாப்பு கவசம் அணிந்து நோயாளிகளை கையாள வேண்டும்
கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு பொதுவான அறிகுறி இருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்
மருத்துவ பணியாளர்களுக்கு தமிழக மருத்துவத்துறை உத்தரவு
Next Story