100% தடுப்பூசி இலக்கு: தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த ஆளுநர்

புதுச்சேரியில் 48 மணி நேரம் தொடர் தடுப்பூசி முகாமை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
x
புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வரை 60 சதவிகித மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 100 சதவிகிதம் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற இலக்கோடு புதுச்சேரி சுகாதாரத்துறை தொடர்ந்து தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று , வில்லியனூர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி முகாமை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தொடங்கி வைத்தார். 



Next Story

மேலும் செய்திகள்