சட்டமன்ற வளாகத்தில் அதிமுக உறுப்பினர்கள் தர்ணா

திமுக பொய்வழக்கு போடுவதாக குற்றம்சாட்டிய அதிமுக உறுப்பினர்கள், சட்டப்பேரவையில் இருந்து வெளி நடப்புச் செய்தனர்.
x
திமுக பொய்வழக்கு போடுவதாக குற்றம்சாட்டிய அதிமுக உறுப்பினர்கள், சட்டப்பேரவையில்  இருந்து வெளி நடப்புச் செய்தனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெளிநடப்பு செய்த அதிமுகவினர், திமுகவின் செயலுக்கு கண்டித்தும், பொய் வழக்கு போடுவதாகவும்  கலைவாணர் அரங்கம் வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கறுப்பு பட்டை அணிந்தும், பதாகை ஏந்தியும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். எடப்பாடி பழனிசாமி, ஒ.பன்னீர்செல்வம், கே.பி. முனுசாமி, செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் முழக்கம் எழுப்பினர்.  

Next Story

மேலும் செய்திகள்