தொலைதூர கல்வி - அரசு துறைகளில் பதவி உயர்வு பெற முடியாது - உயர்நீதிமன்றம் உத்தரவு

திறந்தவெளி பல்கலைக் கழகங்களில் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு அரசு துறைகளில் பதவி உயர்வு வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
x
திறந்தவெளி பல்கலைக் கழகங்களில் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு அரசு துறைகளில் பதவி உயர்வு வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. வேலூர் மாவட்டம், சோழிங்கரைச் சேர்ந்த 2ஆம் நிலை சார் பதிவாளர் செந்தில்குமார் பெயரை பதவி உயர்வு பட்டியலில் சேர்க்க தனிநீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து, பத்திரப்பதிவுத் துறை தலைவரும்,  வணிகவரித் துறை செயலாளரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா, கிருஷ்ணன் அமர்வு, திறந்தவெளி பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு முடிக்காமல் பட்ட மேற்படிப்பு படித்தவர்களை பதவி உயர்வுக்கு பரிசீலிக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளனர். மேலும் பதவி உயர்வு பட்டியலில் செந்தில்குமாரை சேர்க்க வேண்டுமென்ற  தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்