சோதனையில் போலீசாரை தாக்க முயற்சி - கத்தியால் தாக்க வந்த இரு இளைஞர்கள் கைது

திண்டிவனம் அருகே வாகன சோதனையின் போது சப் இஸ்பெக்டரை கத்தியால் தாக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
சோதனையில் போலீசாரை தாக்க முயற்சி - கத்தியால் தாக்க வந்த இரு இளைஞர்கள் கைது
x
திண்டிவனம் அருகே வாகன சோதனையின் போது சப் இஸ்பெக்டரை கத்தியால் தாக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை - திண்டிவனம் புறவழிச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்த முன்றனர். அப்பொழுது தேவா என்ற இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தயால் சப் - இன்ஸ்பெக்டரை தாக்க முயன்றுள்ளார். மற்றொரு நபரான அரவிந்ததாசன் சாலையில்  சோடா பாட்டிலை உடைத்து தாக்க முற்பட்டார். இதனால் அங்கிருந்தவர்கள் அச்சப்பட இருவரியும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இருவரும் சென்னை போரூரை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்து திருடபட்டதாக கூறப்படுப்படும் இருசக்கர வாகனம் மற்றும் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்