அகழ்வாராய்ச்சி பணி தொடக்கம் - சுற்றுச்சூழல் துறை அமைச்சர் துவக்கி வைப்பு

பொற்பனைக்கோட்டையில் நடந்து வரும் அகழ்வாராய்ச்சி பணிக்கு தேவையான நிதி உதவியை தமிழக அரசு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
x
புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் இன்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் அகழ்வாராய்ச்சி பணியை தொடங்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், முதல்கட்ட ஆய்விலேயே இந்த பகுதியில் கோட்டை ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்ததாக கூறினார். மேலும், இந்த அகழ்வாராய்ச்சிக்கு பின் தமிழர்களின் தொன்மையான நாகரீகம் வெளிப்படும் வகையில் பல்வேறுவிதமான பொருட்கள் கிடைக்கும் என்றும்  தெரிவித்துள்ளார். இதையடுத்து, பொற்பனைக்கோட்டை அகழ்வாராய்ச்சி பணிக்கு தமிழக அரசு போதிய நிதி உதவி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மெய்யநாதன் பேட்டியில் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்