ரவுடியை கைது செய்ய முயன்ற போலீசார் - போலீசிடம் தப்பிக்க கால்வாயில் குதித்த ரவுடி

சென்னை புளியந்தோப்பு பகுதியில் கழிவுநீர் கால்வாயில் குதித்து தப்பிக்க முயன்ற ரவுடியை, போலீசார் பத்திரமாக மீட்டு சிறையில் அடைத்தனர்.
x
புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த முகேஷ் என்பவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் அவரை கைது செய்ய போலீசார் முயன்றபோது, அருகில் இருந்த கழிவுநீர் கால்வாயில் குதித்து தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது கழிவுநீர் கால்வாயில் சிக்கிக்கொண்ட முகேஷ்சை போலீசார் அரை மணிநேரம் போராடி மீட்டனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்