செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை விரைவில் முதல்வர் துவக்கி வைப்பார் - அமைச்சர் தங்கம் தென்னரசு

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்காக பெரும்பாக்கத்தில் தனி கட்டிடம் கட்டப்பட்டு வருவதாகவும், விரைவில் முதல்வர் துவங்கி வைப்பார் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
x
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்காக பெரும்பாக்கத்தில் தனி கட்டிடம் கட்டப்பட்டு வருவதாகவும், விரைவில் முதல்வர் துவங்கி வைப்பார் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் துறை வாரியாக ஆய்வு மேற்கொண்ட அவர் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அனைவரின் விருப்பமான உலகத் தமிழ் மாநாட்டை நடத்துவது தொடர்பாக முதல்வர் முடிவு செய்வார் என்றும் கூறினார். மேலும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் உயர் ஆய்வு மையம் உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்