முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு வழக்கு

சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
x
சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரின்பேரில் கரூர், சென்னையில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, அலுவலங்கள், தொழில் நிறுவனங்கள், ஆதரவாளர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்