வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி - பயிற்சி பெற்றவர்கள் வங்கி கடன் பெறலாம்

சாலையோர உணவு வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி மற்றும் சான்றழிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
x
புரசைவாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், நடைப்பாதையில் உணவகங்களை நடத்தும் சிறு வியாபாரிகள் சுகாதாரமான முறையில் உணவு கொடுக்க வேண்டும் என்பதற்காக உணவு பாதுகாப்பு பயிற்சி வழங்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், பயிற்சி பெற்றவர்களுக்கு அளிக்கும் சான்றுகள் வங்கிகளில் கடன் பெற உதவும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்