க/பெ ரணசிங்கம் படம் போல நிஜத்தில் சம்பவம் - கணவன் உடலை மீட்கத் தவிக்கும் மனைவி

வெளிநாட்டில் உயிரிழந்த கணவனின் சடலத்தை பெற முடியாமல் பெரம்பலூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தவித்து வருகிறார்.
x
குன்னம் வட்டம், பெண்ணக்கோணம் கிராமம், காலனி தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரின் மனைவி கவுசல்யா. இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த நிலையில் ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த 2019ல் சவுதி அரேபியா சென்ற ராஜ்குமார் அங்குள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம் நடந்த விபத்தில் அவர் உயிரிழந்ததாக ஆலை நிர்வாகம் கவுசல்யாவிடம் தெரிவித்தது. இதனிடையே கணவரின் உடலை மீட்டுத்தரக்கோரி பல கட்டமாக போராடி வருகிறார் கவுசல்யா. க/பெ ரணசிங்கம் படத்தின் காட்சிகளை போலவே கவுசல்யா, தன் கைக்குழந்தையுடன் போராடி வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் செவிசாய்க்க வேண்டும் என்பதே அவரின் கோரிக்கையாக உள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்