மோட்டார் வாகன ஆய்வாளர் பணி நேர்முக தேர்வு - நேர்முக தேர்வு ரத்து -டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
மோட்டார் வாகன ஆய்வாளர் பணி நேர்முக தேர்வு - நேர்முக தேர்வு ரத்து -டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
x
மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு 
ஜூலை 19 ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில், நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்களில் சிலர் உரிய தகுதியை பெறவில்லை என கூறி, விண்ணப்பதாரர்கள் சிலர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேர்வு நடைமுறைகளில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என கூறி, ஜூலை 19ஆம் தேதி நடைபெற இருந்த நேர்முக தேர்வை தள்ளிவைக்க உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, ஜூலை 19 ஆம் தேதி முதல் ஜூலை 24 ஆம் தேதி வரை நடைபெற இருந்த  மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்