"நீர் நிலைகளுக்கு பட்டா தயாரித்தது எப்படி?" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

மதுரை, நிலையூர் கண்மாய் நீர் நிலை பகுதிக்கு வழங்கி பட்டாக்களை ரத்து செய்ய கோரிய வழக்கில், உரிய ஆவணங்களை சென்னையிலிருந்து வரவழைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
x
மதுரையை சேர்ந்த முத்துராமன் என்பவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் சிவஞானம் ஆனந்தி அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், நீர் நிலையில் உள்ள இடங்களுக்கு பத்திரங்கள் எவ்வாறு தயார் செய்யப்பட்டது?  

நீர் நிலையிலுள்ள இடங்கள் எவ்வாறு விற்கப்பட்டது? என கேள்வி எழுப்பினர். சென்னையில் உள்ள வழக்கு ஆவணங்களை வர வழைத்து, மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் மனுதாரருக்கு தேவையான ஆவணங்களை வழங்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்