முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை சாந்தினியை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை அடையாறு மகளிர் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமின் கோரி மணிகண்டன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி நிர்மல்குமார், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி இரண்டு வாரங்கள் அடையாறு மகளிர் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், பாஸ்போர்ட்டை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், பாஸ்போர்ட் இல்லாவிட்டால் அதுசம்பந்தமாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என மணிகண்டனுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
Next Story