டோக்கியோ ஒலிம்பிக் போட்டி - இந்திய தடகள அணியில் இடம்பிடித்த தமிழக வீராங்கனைகள்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய தடகள அணியில் தமிழகத்தை சேர்ந்த 3 வீராங்கனைகள் உட்பட 5 பேர் இடம் பெற்று உள்ளனர்.
x
ஜப்பானின் டோக்கியோ நகரில் வருகிற 23-ம் தேதி ஒலிம்பிக் போட்டி ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய தடகள அணியின் வீரர், வீராங்கனைகளை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்து உள்ளது. அதில் தமிழகத்தை சேர்ந்த தடகள வீராங்கனைகள் ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் மற்றும் தனலட்சுமி சேகர் ஆகிய மூவர் உட்பட 5 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் மூவரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்பார்கள் என இந்திய தடகள சம்மேளனம் தெரிவித்து உள்ளது. இதில், ரேவதி வீரமணி என்பவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்