தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து சேவை

தமிழகம் முழுவதும் பேருந்து சேவை தொடங்கியுள்ள நிலையில், வெளிமாநிலங்களுக்கான போக்குவரத்து இன்னமும் தொடங்கவில்லை
x
ஓசூர் அருகே உள்ள ஜுஜுவாடி சோதனைச்சாவடி பகுதி வரை செல்லும்  தமிழக அரசு பேருந்துகள் அங்கு பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் ஓசூர் பேருந்து நிலையத்திற்கு செல்கின்றன. பேருந்துகளில் இருந்து இறங்கும் பயணிகள் அருகில் நிற்கும் கர்நாடக அரசு பேருந்துகளில் ஏறி அம்மாநிலத்தில் செல்கின்றனர் அதேபோல அந்த மாநிலத்தில் இருந்து வரக்கூடிய பயணிகளும் தமிழக அரசு பேருந்துகளில் ஏறி தமிழகத்திற்கு சென்று வருகிறார்கள்.இதுவரை தமிழக எல்லைப் பகுதியில் நடத்தப்பட்டு வந்த இ பதிவு சோதனைகளும் நிறுத்தப்பட்டு இருக்கிறது. அண்டை மாநிலங்களில் இருந்து கர்நாடகா வழியாக வரும் கார்கள் வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் சர்வீஸ் சாலையில் தமிழகத்திற்கு இ பதிவு இல்லாமல் சென்று வருகின்றன. இரு மாநில பேருந்துகளும் ஒரே இடத்தில் திரும்புவதால் விபத்துக்கள் அதிக அளவில் நடைபெறுவதாகக் கூறி இந்த இ பதிவு சோதனைகள் நிறுத்தப்பட்டிருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்