வங்கி மேலாளர் உயிரிழந்த விவகாரம்... மருத்துவ கல்வி இயக்குநருக்கு நோட்டீஸ்

நாகப்பட்டினத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த தனியார் வங்கி மேலாளர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குநர் அறிக்கை அளிக்க தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
x
வங்கி மேலாளர் உயிரிழந்த விவகாரம்... மருத்துவ கல்வி இயக்குநருக்கு நோட்டீஸ்  

நாகப்பட்டினத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த தனியார் வங்கி மேலாளர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குநர் அறிக்கை அளிக்க தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கொரோனா தொற்று காரணமாக நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனியார் வங்கி மேலாளர் ராஜேஷ், கடந்த 23ஆம் தேதி, திடீரென உயிரிழந்தார். மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாயில் கசிவு ஏற்பட்டதால் நோயாளிகள் பிற வார்டுகளுக்கு மாற்றப்பட்டதாகவும், அப்போது ஆக்சிஜன் சப்ளையை நிறுத்தியதால் தான் தனது கணவர் உயிரிழந்ததாகவும் ராஜேஷின் மனைவி சுபா குற்றம் சாட்டினார். இது தொடர்பாக தினத்தந்தி நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்து கொண்ட மனித உரிமை ஆணையம், 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய, மருத்துவ கல்வி இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்